மலையாளத்து அனிருத்தை நாயகனாக்கி இப்படத்தை எடுக்கிறார்கள். லண்டனிலிருந்து ஜோஷனா ஹீரோயினாக நடிக்கிறார். இன்னொரு நாயகியாக வாணி கிஷோர் இருக்கிறார். கூடவே சஞ்சனா சிங்கும் இருக்கிறார்.
இத்தனை பேரை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம்... என்னென்னவோ செய்யலாமே.. இரு நாயகிகளுக்கும் வெயிட்டான ரோலாம். சஞ்சனா சிங்குக்கு அமர்க்களமான குத்துப் பாட்டை கையில் கொடுத்து ஆட விட்டுள்ளனர். அவரது ஆட்டம் பேசப்படுமாம்.
பிறகு, ஜோஷ்னா நடிப்புக்கு புதியவரல்ல. இவரது தாயார் சரோஜா அந்தக் காலத்து நாயகியாவார். வடைமாலை என்ற படத்தில் இவர்தான் நாயகியாம். இந்தப் படத்தை இயக்கியவர் யார் தெரியுமா, வாலிபக் கவி வாலிதான்.
படத்தில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் வடிவேலு நடித்துள்ளாராம். அப்படியானால் இந்தப் படம் தயாரிப்பிலேயே எத்தனை காலமாக இருந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இருந்தாலும் அனைவரும் ரசிக்கும் வகையில், வித்தியாசமான கதையுடன், கலவையுடன் படம் இருக்கும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார் இயக்குநர்.
No comments:
Post a Comment