Sunday, 20 May 2012

நான் விசுவாசமாத்தான் இருந்தேன், ஆனால் அவர் இல்லையே... நயனதாரா!

I Was Sincere Prabhudeva Nayanthara Aid0128பிரவுதேவாவைப் பிரிவேன் என்று தான் ஒருபோதும் நினைத்ததே இல்லை. நான் அவருக்கு உண்மையாக, விசுவாசமாகத்தான் இருந்தேன், ஆனால் அவர் இல்லை என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.

பிரபுதேவாவுடனான காதல் முறிந்ததற்கான காரணத்தை முதல் முறையாக வாய் திறந்து கூறியுள்ளார் நயனதாரா ஒரு பேட்டியில்.

இந்தப் பேட்டியில் பிரபு தேவாவுடான காதல் முறிய காரணம் என்ன என்பதை அவர் சொல்லியுள்ளார். இதுகுறித்து நயனதாரா கூறுகையில், 

காதலுக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தேன். பிரபுதேவாவுக்காக சிலவற்றை விட்டுக் கொடுத்தேன். இருப்பினும் திருமணம் வரை சென்ற எங்கள் காதல் இறுதியில் முறிந்தவிட்டது. எங்கள் விஷயத்தில் மட்டுமல்ல எத்தைனையோ பேரின் காதல் அல்லது திருமணம் முறிவது நடக்கத் தான் செய்கிறது.

பொதுவாக காதலிலும் சரி, திருமணத்திலும் சரி ஒருவரையொருவர் முழுமையாக புரிந்துகொள்ளாமல் இருப்பது இருக்கத் தான் செய்யும். அதனால் பிரச்சனை ஏற்படத் தான் செய்யும். இது ஒரு அளவோடு நிற்க வேண்டும். எல்லை மீறும் போது காதல் முறிவு, திருமண முறிவு ஏற்படுகின்றது. என் விஷயத்திலும் அப்படித் தான் நடந்திருக்கிறது. 

சில விஷயங்களை என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. பிரச்சனைகளை சமாளிக்க முடியவில்லை அல்லது தெரியவில்லை என்று கூறலாம். உலகில் நிலையானது என்று எதுவும் இல்லை. மக்கள் மாறுகின்றனர், சூழ்நிலைகள் மாறுகின்றன, செயல்பாடுகள் மாறுகின்றன. அது போன்ற ஒரு மாற்றம் தான் என்னை பிரியச் செய்தது.

நான் பிரிந்ததற்கு பல காரணங்கள் இருக்கலாம். அது என் சொந்த விஷயம். அது பற்றி இனியும் பேச விரும்பவில்லை. என் சொந்த விஷயத்தை உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. 

என்னைப் பற்றி பத்திரிக்கைகள் ஏதேதோ எழுதி வதந்திகளைப் பரப்பின. ஆனால் நான் எதற்கும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தேன். தற்போது நிலைமை மாறிவிட்டது. காதல் முறிந்துவிட்டது. ஒரு உறவு சரியில்லை என்றால், அப்போது எல்லாமே மாறுவது இயற்கை தானே?

உறவு முறிவுக்கு 100 காரணங்கள் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். நான் பிரபுதேவாவுடன் பழகியபோது 100 சதவீதம் உண்மையாக இருந்தேன். ஆனால் அதற்கு மதிப்பில்லை என்கிற போது உறவை முறி்ததுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. 

பிரபுதேவாவுடனான காதல் இப்படி பாதியிலேயே முறிந்துவிடும் என்று ஒருபோதும் நினைத்ததே இல்லை. ஆனால் வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் நடக்கும் என்பதை இது உறுதிபடுத்தியுள்ளது. காதலோ, திருமணமோ இருவரும் பரஸ்பரம் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் அது வெற்றிகரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும் என்றார்.

No comments:

Post a Comment